search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது நுழைவு தேர்வு"

    • அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    சேலம்:

    ராணுவத்தில் சேருவ தற்கான அக்னிபாத் அடிப்ப டையில் அக்னிவீர் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. ராணுவ ஆள் சேர்ப்பில் முதலில் உடற்தகுதி தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் ராணுவ ஆள் சேர்ப்பில் முதல் முறையாக எழுத்து தேர்வுக்கு பின்பு தான் உடற்தகுதி தேர்வு நடை பெறும் என மத்திய பாது காப்பு அமைச்சகம் கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு அறிவித்தது.

    இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்பு வோர் மார்ச் மாதம் 15-ந்தே திக்குள் பதிவு செய்ய அனும திக்கப்பட்டனர். பதிவு செய்த நபர்களுக்கு பொதுத் நுழைவு தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஷிப்ட் முறையில் இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம், நாமக்கல் இளைஞர்கள்

    இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி உள்பட சில நகரங்களி லும் புதுச்சேரி யிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்க ளில் சேலம், நாமக்கல், தரும்புரி, கிருஷ்ணகிரி மாவட்ட இளை ஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆன்லைன் வழியாக எழுதுகிறார்கள். குறிப்பாக இந்த 4 மாவட்டங்க ளிலும் இருந்தும் ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் திரளான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்

    • தேசிய தேர்வு முகமை முதுநிலை படிப்புக்கள் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு.

    சேலம்:

    இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி 2022-ம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (UG) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்குரிய விண்ணப்பபதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியும் என்பதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, வருகிற ஜூலை முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

    இதனைதொடர்ந்து முதுநிலை (PG) படிப்புக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதைெயாட்டி தேசிய தேர்வு முகமை முதுநிலை படிப்புக்கள் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    இதில் மத்திய பல்கலைக்கழங்கள் உள்பட மொத்தம் 51 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட 36 மத்திய பல்கலைக்கழகங்கள், 8 மாநில பல்கலைக்கழகங்கள், 2 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், 5 தனியார் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் புதிதாக தனியார் பல்கலைக்கழங்களும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×